Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…

ஏப்ரல் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலகர்,

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் கடமைகளில் குழுக்களின் செயற்பாடுகள் திறமையாகவும், சிறப்பாகவும் இருந்ததாகவும் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்தார்.

அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள தேர்தல் ஆணையாளர் இ. சசீலன் அவர்களை வரவேற்றத்துடன், இடமாற்றம் பெற்றுச் சென்ற உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ்க்கு நன்றிகளை தெரிவித்தார்.

தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைவரது ஒத்துழைப்பினையும் நல்குமாறும் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலகர், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை விடவும் மேன்மேலும் வினைத்திறனாக செயற்படுவது தொடர்பாக ஒவ்வொரு குழுக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை முழுமையாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இக் கலந்துரையாடலில் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக வட்டாரங்களில் வாக்களிப்பு நிலையங்கள், வாக்கொண்ணும் முறைமைகள் போன்றவை தொடர்பாகவும், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும், உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் விளக்கமளித்தார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளடங்கலாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

முந்தைய செய்தி மன்னார் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு அஞ்சலி.
அடுத்த செய்தி மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் 17 வீரர்கள் தேர்வாகியுள்ளனர் …

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

வவுனியாவில் நான்கு சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.

மார்ச் 8, 2025
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலை விடுதியில் சிறுவர் தின கொண்டாட்டம்

அக்டோபர் 3, 2025
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியதாக குற்றசாட்டு!

செப்டம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜூலை 1, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?