சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை வழங்கும் முயற்சியில் யாழ்ப்பாண மருத்துவ சங்கம் மற்றும் இணுவில் மெக்லியாட் மருத்துவமனை இணைந்து பசுமை திட்டம் 2025 யில் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சி சுற்றுச்சூழலின் சமநிலையை மேம்படுத்த மருத்துவ பயன்பாடுள்ள நெல்லிமரங்கள் 1,000 நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
யாழ் மருத்துவ பீட மாணவர் நலநோன்பு வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை தொடக்க விழா நடைபெற்றது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமாரன், யாழ்ப்பாண மருத்துவ சங்க உறுப்பினர்கள் , மெக்லியாட் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள், மருத்துவ பீடத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.