Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

“தூய இலங்கை” வேலைத்திட்டத்தில் இராணுவத்தின் பங்களிப்பு…

மார்ச் 19, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தற்போதைய புதிய அரசாங்கத்தில் “தூய இலங்கை” என்ற தேசிய வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி இன்றைய சிறுவர்கள் நாளைய சிறுவர்களாக உருவாகும் தேசத்தின் பிள்ளைகளுக்கு நல்லதொரு வளமான நாட்டை பரிசளிப்பதோடு, சிறந்த கல்வியை வழங்கும் நோக்கோடு பாடசாலைகளை பௌதீக ரீதியில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வேலைத்திட்டத்தில் இலங்கை இராணுவம் அவர்களின் பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.

சிறந்த பிரஜைகளை கொடுக்கும் ஒரு இடம் பாடசாலைகள், இதனை கருத்திற் கொண்டே இராணுவ வீரர்களின் அனுபவம், அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, பிள்ளைகளுக்கு உகந்த பாடசாலை சூழல் இன்று உருவாக்கப்படுகிறது.

“தூய இலங்கை” திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் தற்போது செயல்படுத்தப்படும் பாடசாலை மறுசீரமைப்பு திட்டம் மிகவும் காலத்திற்கேற்ற திட்டமாகும், இத்திட்டமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வெல்லவாய, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற கிராமப்புற சூழல்களில் வாழும் கிராமப்புற சிறார்களும் பாகுபாடு இல்லாமல் வசதிகளைப் பெற வேண்டிய ஒரு குழு என்பதை அங்கீகரிக்கிறது.

சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை சார்ந்த மனிதாபிமான மனப்பான்மைகளை வளர்க்கவும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அதிகரிக்கவும், வீணாவதைக் குறைக்கவும், தார்மீக நம்பிக்கையை வலுப்படுத்தவும் பாடசாலை சிறந்த இடமாகும். பாடசாலையின் மூலம் மகிழ்ச்சியான, படைப்பாற்றல் மிக்க, ஒழுக்கமான மற்றும் திறமையான குழுவை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் நமது இராணுவ வீரர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்று கூறலாம்.

‘தூய இலங்கை’ திட்டத்தின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்திற்கு இராணுவம் தொடர்ந்து பங்களித்து வருகிறது, மேலும் இதுவரை நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ் 14,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் தொழில்நுட்ப உதவி மற்றும் மனிதவள பங்களிப்புடன், பாடசாலைகள் புனரமைக்கும் திட்டம் 2025 பெப்ரவரி 20 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 496 பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், புனரமைக்கப்பட வேண்டிய கிட்டத்தட்ட 300 படசாலைகளின் கூரைகள் பழுதுபார்க்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு, பாடசாலைகளின் சேதமடைந்த வேலிகள் பழுதுபார்க்கப்பட்டன, பாடசாலைகளுக்கான பாதைகள் புனரமைக்கப்பட்டன, மேலும் பயன்படுத்த முடியாத அண்ணளவாக 5,500 மேசை கதிரைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பாடசாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், பாடசாலை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து இராணுவம் தொடர்ந்து ஆதரவைப் பெற்றுவருகின்றது. மற்றவர்களுக்கு ஊக்கமளித்து, அரசாங்கத்தின் “ஒரு வளமான நாடு – ஒரு அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நாம் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நம்மில் பலருக்கு நினைவூட்டுகிறது.

முந்தைய செய்தி தமிழரசுக்கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்தது…
அடுத்த செய்தி வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் பயிற்சிக் கருத்தரங்கு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று – பல்வேறு தரப்பினரும் அஞ்சலி.

பிப்ரவரி 13, 2025
இலங்கை

வவுனியாவில் புகையிரதம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் காயம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலுக்காக ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்!

ஆகஸ்ட் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட மீன்பிடி பூனை

பிப்ரவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?