Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அமைச்சர் சந்திரசேகரை சபையில் சாடிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ….

மார்ச் 7, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் என்னை நேற்று சபையில் நாய் என்று குறிப்பிட்டுள்ளார்.அவருக்கு இது விளங்குமோ தெரியாது என்றாலும் நான் குறிப்பிடுகின்றேன்.

“நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவிலே ஆகுமாம் நுண்ணறிவு.” “தளத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம். நிலத் தளவே ஆகுமாம் குணம்.”
அந்த அமைச்சருக்கு இது விளங்காது ஏனென்றால் நாயை நடுக்கடலில் கொண்டு சென்று விட்டாலும் அது நீரை நக்கியே குடிக்கும். அவர் சபையில் இல்லாவிட்டால் நான் சொன்னதாக அவருக்கு இதை யாராவது கூறுங்கள் என அர்ச்சுனா எம்பி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அர்ச்சுனா எம்பி இவ்வாறு கூறினார்.

”வாசித்து அறிந்து கொள்ளக் கூட தெரியாத கை நாட்டை வடக்குக்கு அமைச்சராக வழங்கியுள்ளது இந்த அரசாங்கம்.
நான் இந்த அரசாங்கத்தின் மீது பெரும் மதிப்புக்குரியவன். என்பதால் ஏதாவது சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்.

வரவு செலவுத் திட்டத்தின் மொத்த தொகை
8ஆயிரத்து 835 பில்லியன் . அதில் வரவு 4ஆயிரத்து 590 பில்லியன். 4ஆயிரத்து 245 பில்லியன் கடன் பெற வேண்டிய தேவை உள்ளது.

இதுவே வரவு செலவுத் திட்டத்தின் ஒரு மேலோட்டக் கணிப்பு. 8835 பில்லியன் தொகையை அரசாங்கம் தந்திருக்கின்றது.

வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு உபயமாக தருவது 93 பில்லியன் ஆகும். அந்த வகையில் இந்த அரசாங்கம் யாரோ விட்ட தவறுக்காக இந்த தொகையை தேட வேண்டியுள்ளது.

ஊழல் செய்ய மாட்டோம் என்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இது . அந்த வகையில் சுகாதார அமைச்சுக்கான போக்குவரத்து செலவு 475 மில்லியனாக காணப்படுகின்றது. 2024ல் 405 மில்லியன் தான் செலவிடப்பட்டுள்ளது.

361 மில்லியனே 2003 ஆம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நீங்கள் தற்போது ஒதுக்கியிருப்பது அதிகமாகும்.

அத்துடன் பாதுகாப்பை விட சுகாதாரத்துக்கே நாங்கள் அதிகமாக நிதி ஒதுக்கி உள்ளோம் என்று கூறுகிண்றீர்கள் . அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை விட உங்களுடைய பாதுகாப்பு செலவினம் அதிகம் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டை விட விட இந்த ஆண்டிற்கு சுகாதாரத்திற்காக ஒன்பது வீதமே அதிகமாக ஒதுக்கி இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 10 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின….
அடுத்த செய்தி மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் மீனவ பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

பிப்ரவரி 11, 2026
இலங்கை

இவ்வாண்டில் இதுவரையில் 80 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

ஆகஸ்ட் 13, 2025
இலங்கை

பிரதி காவல்துறை மாஅதிபராக நியமனம் பெறவுள்ள நால்வர்

செப்டம்பர் 6, 2025
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் பிரதேச செயலர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

டிசம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?