Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய அதிபர்

மார்ச் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை , சிகை அலங்காரங்களை சீர் செய்து வருமாறு அதிபர் திருப்பி அனுப்பியுள்ளார்.

யாழ். நகருக்கு அண்மையில் உள்ள பிரபல பாடசாலையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், இதுவரை காலமும் கல்வி விடுமுறையில் நின்று , பாடசாலைக்கு இன்றைய தினம் பரீட்சை அனுமதி பெற வித விதமான சிகை அலங்கரிப்புடன் ( முடி வெட்டல்) சென்றுள்ளனர்.

அதில் சில மாணவர்கள் தமது பெற்றோருடன் அனுமதி அட்டைகளை பெற சென்றுள்ளனர். அவ்வாறு வித்தியசமான சிகை அலங்கரிப்புடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை சிகை அகலங்கரிப்பை சீர் செய்து வருமாறு பாடசாலை அதிபர் திருப்பி அனுப்பியுள்ளார்.

உடனே பாடசாலைக்கு அருகில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு சென்ற மாணவர்கள் சிகை அலங்கரிப்பை சீர் செய்து பாடசாலை திரும்பினார்கள்.

மாணவர்கள் தமக்குரிய ஒழுக்க விழுமியங்களுடன் நடக்க வேண்டும் எனவும் , பாடசாலை காலம் முடியும் வரை பாடசாலைக்கான ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என மாணவர்களை எச்சரித்ததுடன் , பெற்றோர்களுக்கும் , பிள்ளைகளுடைய நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கரிப்பு தொடர்பில் சிகை அலங்கரிப்பு நிலையங்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் , இது தொடர்பில் சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கம் தமது அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வல்லையில் வழிப்பறி.
அடுத்த செய்தி அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு ஆறாயிரம் ரூபா வவுச்சர்கள் கையளிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி வீதி திறப்பு…

ஏப்ரல் 27, 2025
இலங்கை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை.

பிப்ரவரி 4, 2025
இலங்கை

மன்னாரில் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்திட்டத்தின் ஊடாக கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வு.

பிப்ரவரி 23, 2025
இலங்கைமுதன்மை செய்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய செவ்வந்தியைத் தேடும் பொலிஸார்.

பிப்ரவரி 24, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?