இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் எட்டாவது நாளாக தொடரும் நிலையில் மீனவர்கள் தங்கச்சி மடத்தில் நான்காவது நாளாக உள்ளிருப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாளை அடுத்த கட்ட போராட்டம் நடத்துவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.