வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் இரண்டாவது அணிக்கான கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று(23) வவுனியா பல்கலைக்கழகத்தின் பார்க் வீதியில் உள்ள தொடர் தொலைக் கல்வி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2023 ம் ஆண்டு ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் முதலாவது அணிகற்கை நெறியை ஆரம்பித்து நிறைவு செய்திருந்தது
இதன் தொடர்ச்சியாக ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் இரண்டாவது அணிக்கான கற்கைகள் இன்று(23) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கற்கை நெறியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி மதிவதனி சசிதரன் தலைமையில் இடம்பெற்ற கற்கைநெறி ஆரம்ப நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ர பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா மற்றும் ஊடகவியலாளர் அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை மற்றும் சிரேஸ்ர ஊடகவியலாளர் அ.நிக்சன், மற்றும் ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், நபீஸ் சகவாழ்வு நிலைய பணிப்பாளர் யூட் லியோன் பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.