Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தமது மோட்டார் சைக்கிளை முந்தி சென்றதாக வர்த்தகர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பொலிசார்.

பிப்ரவரி 19, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதி பிரதான வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி அவர் மீது தலைக்கவத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை(18) இரவு 7.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது,

வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த வர்த்தகர் குணரட்னம் மதிகுமார் ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதியிலுள்ள கிராம சேவகர் காரியாலயத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி சென்றதையடுத்து அவரை முந்தி சென்று தாம் பொலிஸ் நீ பிழையாக மோட்டார் சைக்கிள் செலுத்துவதாக தெரிவித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி வர்தகர் மீது தமது தலைக்கவசத்தால் தலையில் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் கூடி பொலிசாரை அங்கிருந்து செல்லவிடாது தடுத்து நிறுத்தி பொலிஸ் அவசர இலக்கமான 1919 தொலைபேசி இலக்கத்துக்கு அறிவித்ததையடுத்து அங்கு ஏறாவூர் பொலிசார் முச்சக்கரவண்டியில் வந்து விசாரணையை மேற்கொண்ட போது தாக்குதலை நாத்திய பொலிசார் இருவரும் மதுபோதையில் இருப்பதை கண்டுபிடித்த பொலிசார் அவர்கள் இருவரையும் தமது முச்சக்கரவண்டியின் முன்னாள் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் குறித்த பொலிசார் இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு செல்லாமல் அங்கு அருகிலுள்ள வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த இரு பொலிசாரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவில் கடமையாற்றிவரும் இருவரும் சம்பவதினமான நேற்று காலை 11.00 க்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகிவரும் இருவரை கைது செய்வதற்காக கடமை கையேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மது போதையில் தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாருக்கு எதிராக பாதிக்கப்பட்ட வர்த்தகர் முறைப்பாடு செய்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முந்தைய செய்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ‘ ஊராட்சி முற்றம்’ மகளிர் குரல் கூட்டம்!
அடுத்த செய்தி முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளம் – முத்துஐயன்கட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 19வது ஆண்டு நினைவு தினம்!

டிசம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அவசரகால சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள பாராளுமன்றம்

பிப்ரவரி 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது

நவம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

மே 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?