60 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி பகுதியில் இவ்வாறு கைது இடபெற்றுள்ளது.
பூநகரி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த கூலர் வாகனத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன் போது குறித்த வானத்திலிருந்து 60 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் சந்தேக நபர்களையும் நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.