Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பில் பொலிசாரின் பெயரை பயன்படுத்தி பணமோசடி.

பிப்ரவரி 6, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் கொடுத்த 29 இலட்சம் ரூபா பணத்தை வசூலித்து தருவதற்கு பொலிசாருக்கு 3 வீதம் பணம் கொடுக்க வேண்டும் என பொய் தெரிவித்து மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் காரியாலயத்துக்குள் சென்று வருவதுபோல பாசாங்கு காட்டி வங்கி ஒன்றின் முகாமையாரிடம் 30 ஆயிரம் ரூபாவை வாங்கிய மோசடியில் ஈடுபட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (04) கைது செய்துள்ளதாக மட்டு விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது

அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் முகாமையாளராக கடமை யாற்றிவரும் ஒருவர் மீன்ரின் விற்பனை வர்த்தகம் செய்வதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 29 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த வர்த்தக நடவடிக்கை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதையடுத்து வழங்கிய பணத்தை வர்த்தகரிடம் மீள தருமாறு கோரி வந்த நிலையில் அவர் பணத்தை கொடுக்காது ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பிரதேசத்திலுள்ள வங்கிக்கு சென்றுவந்த 21 வயதுடைய இளைஞனுக்கும் வங்கி முகாமையாருக்கும் இடையே நட்பு ஏற்பட்ட நிலையில் முகாமையாளர் தான் வர்த்தகம் செய்ய பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் அவருக்கு எதிராக மட்டக்களப்பு விசேட குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞன் தனக்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் அவ்வாறே மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தெரியும் நான் அவருடன் பேசி பணத்தை வாங்கிதருகின்றேன் அவருக்கு 3 வீதம் பணம் வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளான்.

அதற்கு சம்மதித்த வங்கி முகாமையாளரை கூட்டிக் கொண்டு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்குள் வெளியில் வங்கி முகாமையாளரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று வருவது போல பாசாங்கு காட்டிவிட்டு எல்லாம் சரி என முற்பணமக 30 ஆயிரம் ரூபாவை வாங்கி கொண்டான்.

அதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் மிகுதி 20 ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டும் நான் குறித்த பொலிஸ் காரியாலயத்தின் முன் நிற்பதாக தெரிவித்து முகாமையாளரை அழைத்துள்ள நிலையில் அவர் 20 ஆயிரம் ரூபாவுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயப்பகுதிக்கு சென்று இளைஞனை அங்கு விட்டுவிட்டு அவர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து தான் வங்கி முகாமையாளர் என தெரிவித்து தான் கொண்டு சென்ற பழங்களை பரிசாக கொடுத்து நீங்கள் செய்த உதவிக்கு நன்றி மிகுதி பணம் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனைகேட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த முகாமையாளரை ஆச்சரியமாக பார்த்து என்ன செய்தேன் என கேட்டபோது முகாமையாளர் தயக்கத்தின் பின்னர் இளைஞன் இவ்வாறு நடந்து கொண்டான் அதனால் மிகுதி பணத்துடன் வந்துள்ளதாக நடந்தவற்றை தெரிவித்தார்.

இதனையடுத்து அவர் அப்படி ஒருவரையும் தெரியாது நான் புதிதாக வந்துள்ளதாக தெரிவித்து அங்கு வெளியில் நின்றிருந்த குறித்த இனைஞனை பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பொலிசாரின் பெயரை பயன்படுத்தி களங்கம் விளைவித்து சட்டவிரோதமாக பணம் வாங்கிவந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

முந்தைய செய்தி 60 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.
அடுத்த செய்தி ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டுவரும் வடிகான் தொடர்பில் முறைபாடு!

செப்டம்பர் 6, 2025
இலங்கை

மட்டக்களப்பில் நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக 60 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கானஸ்டபிள் இடைக்கால பணிநீக்கம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த அத்தனை ஆன்மாக்களின் தியாகங்களும் மகத்தானது – பா.உ. செல்வம் அடைக்கலநாதன்

ஏப்ரல் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?