Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பொலிசாரிடம் விடயங்களை தெளிவுபடுத்தி கிளிநொச்சி நகரில் தொடரும் கையெழுத்து போராட்டம்.

ஜனவரி 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் குறித்த கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ள தயாரான போது அங்குவந்த கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் ஒலிபெருக்கி அனுமதி பெற்று குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும்
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த கையெழுத்துப் போராட்டம் தொடர்ச்சியாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சியில் மட்டும் இவ்வாறு பொலிசார் இடையூறுகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியமைக்கு ஏற்ப்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற ஏற்பாட்டாளர்கள் பொலிசாருக்கு விடயங்களை தெளிவுபடுத்திய பின்னர் பொலிசார் குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ள அனுமதியளித்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் குறித்த இடத்தில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்று வருகிறது.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் மத தலைவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கையொப்பங்களை பதிவுசெய்கின்றனர்.

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்படும் குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி அபிவிருத்தி இடை நடுவில் விடப்பட்டு உயிராபத்துக்களை ஏற்படுத்திய பகுதிக்கு ஆளுநர் விஜயம்.
அடுத்த செய்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக சாரதி கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கழிவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்து – சாரதி பலி!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆரையம்பதியில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்.

பிப்ரவரி 24, 2025
இலங்கை

சுகாதார மேற்பார்வைக் குழுவின் ஆய்வு அண்மையில் இடம்பெற்றது!

ஜூலை 28, 2025
இலங்கை

கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?