Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அபிவிருத்தி இடை நடுவில் விடப்பட்டு உயிராபத்துக்களை ஏற்படுத்திய பகுதிக்கு ஆளுநர் விஜயம்.

ஜனவரி 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் ஆனது 2020ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இடை நடுவே கைவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் வரை சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி ஒப்பந்த காரர்களின் பொறுப்பில் இருந்த பாலத்திற்கான பாதுகாப்பு சமிக்கைகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அனைத்தும் கடந்த மாதத்தில் இருந்து முற்று முழுதாக அகற்றப்பட்டுள்ளது.

அதன் பின்னர் எந்தவித பாதுகாப்பும் இன்றி பாலம் உள்ளது. அத்துடன், எந்தவித சமிக்கைகளோ மின்விளக்குகளோ பொருத்தப்படாத காரணத்தினால் கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 3 விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன், கடந்த 31 ஆம் திகதி திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் இவ்வீதி ஊடாக பயணிக்கும் பொழுது குறித்த பாலத்தில் உட்பகுதியில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து இன்று வட மாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டதுடன், எதிர்வரும் மார்ச் மாதமளவில் இப்பாலத்துக்கான புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்காலிக பாதுகாப்புக்காக வீதி விளக்குகள் மற்றும் வீதி சமிக்கைகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிபுரை வழங்கினார்.

இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில் புனரமைப்பு பணிகளுக்காக மக்களின் வரி பணத்திலேயே புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும் இப்படியான வீண்விரையத்தினை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் நஷ்ட ஈடு சம்பந்தப்பட்ட திணைக்கலங்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் இன்றைய தினம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
அடுத்த செய்தி பொலிசாரிடம் விடயங்களை தெளிவுபடுத்தி கிளிநொச்சி நகரில் தொடரும் கையெழுத்து போராட்டம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொரளையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்ட ரீதியான ஆவணங்களோடு வாருங்கள் காணிகளை பெற்று தருகின்றோம் – நா.உ. இளங்குமரன்

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது!

அக்டோபர் 17, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசுக்கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்தது…

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?