மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க இராணுவப்படைகளின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் விக்கிரமசிங்க, இராணுவத் தலைமையகத்தில் பணிப்பாளர் ஜெனரல் ஸ்டாஃப் (DGGS) மற்றும் இதற்கு முன்னர் பிரதிப் படைத் தளபதியாக பணியாற்றினார். இந்திய இராணுவ கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்லூரி ஆகியவற்றில் அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர் அவர் தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார்.
இராணுவத்தின் 45 ஆவது பதவிநிலை பிரதிநிதியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.