Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

30 ஆண்டுகளாக சிறையில் வாடும் அண்ணாவை விடுவியுங்கள் – வாகினி

ஜனவரி 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதியான எனது அண்ணனை விடுவியுங்கள் என விக்னேஸ்வரநாதன் பார்த்திபனின் சகோதரி வாகினி ஜனாதிபதி அனுரவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய அண்ணாவிற்கு விடுதலை கிடைத்துவிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் பல ஜனாதிபதிகளிடம் முறையிட்டும் எந்த விதமான தீர்வுகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஜனாதிபதி அனுர நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார் அவர் வருகை தரும் தினமான 31ஆம் திகதியுடன் எனது அண்ணா கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது.

கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடைய அண்ணாவுக்கும் மன்னிப்பு கிடைக்கவில்லை. இந்த முறை சுதந்திர தினத்தில் என்றாலும் அவரை விடுதலை செய்து அண்ணாவை எங்களுடன் சுதந்திரமாக வாழவிடுங்கள்.

நாங்கள் எங்களுடைய குடும்பம் சார்பில் உங்களை கும்பிட்டு கேட்கின்றோம். நீங்கள் என்றாலும் என்னுடைய அண்ணாக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுங்கள்.

30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து எங்களுடைய அண்ணாவுக்கு தற்போது 50 வயதாக போகின்றது. இனியும் அவரை சிறையில் வைத்து இருக்காதீர்கள், சிறையில் வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்.

எங்களுடைய அண்ணா விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் எங்களுடைய குடும்பம் காத்திருக்கின்றது.

நான் இறுதியாக ஜனாதிபதி அனுரவின் கூட்டத்தில் கலந்து கொண்டபோதும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதை நம்பியே நாங்களும் இருக்கின்றோம்.

இந்த சுதந்திர தினத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பளித்து எங்களுடைய அண்ணாவிற்கு சுதந்திரத்தினை கொடுங்கள் என்று நாங்கள் மன்றாடிக் கேட்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

 

முந்தைய செய்தி இந்திய கடற்தொழிலாளர்கள் 11 பேர் விளக்கமறியலில் – இருவர் தொடர்ந்து வைத்திய சிகிச்சையில்
அடுத்த செய்தி புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதிவரை நீடிப்பு!

ஆகஸ்ட் 25, 2025
இலங்கை

யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலவாக்கலையில் நீராடச்சென்ற இளைஞர் சடலமாக மீட்பு !

ஆகஸ்ட் 4, 2025
இலங்கை

வீட்டுத்திட்டத்துக்குரிய பயனாளிகள் அரசியல் தலையீடுகள் இன்றி தெரிவு

மார்ச் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?