வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் – புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில் நேற்று (25) அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இருவரும் இன்றைய தினம் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 71, 52 வயதுகளை உடைய இருவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.