கடந்த 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் வீதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
இன்றய தினம் இவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தனிப்பட்ட விஷயத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனால், இன்று முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை தற்போதைய வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி, ஏப்ரல் 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.