Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். நாடாளுமன்ற உறுப்பினரால் சுண்ணக்கற்களுடன் பிடிக்கப்பட்ட பாரவூர்தி விடுவிப்பு.

ஜனவரி 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்களை சுண்ணக்கற்களுடன் சாவகச்சேரி நீதிமன்று பிணை முறையில் விடுவித்துள்ளது.

தென்மராட்சி பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை சுண்ணக்கற்களுடன் பயணித்த கனரக வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பிடித்து சாவகச்சேரி பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் மீதான விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் நடைபெற்றது.

அதன் போது, கனரக வாகனத்தின் உரிமையாளர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, பாரவூர்தியில் சட்டவிரோத சுண்ணக்கல் கடத்தல் மேற்கொள்ளப்படவில்லை. கனியவளச் சட்டத்தின் கீழ் புவிச்சரிதவியல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட முறையான அனுமதிப் பத்திரத்துக்கு அமைய சுண்ணக்கற்களை கொண்டு சென்றதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றால் அகழப்பட்ட சுண்ணக்கற்களை சிறிய கற்களாக உடைத்து, அவற்றை காவுகை செய்வதற்கு பிறிதொரு அனுமதிப் பத்திரங்களைப் பெறவேண்டிய அவசியம் சட்டத்தில் இல்லை என்றும் தனது சமர்ப்பணத்தில் தெரிவித்தார்.

அத்துடன், இதுபோன்ற வழக்கில், கெப்பிட்டிக்கொலாவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியதுடன் , முறையாக அனுமதிப் பத்திரம் பெற்று கல்லுடைக்கப்பட்ட இடத்தில் இருந்து சுண்ணக்கல் கொள்வனவு செய்யப்பட்ட பற்றுச்சீட்டையும் மன்றில் சமர்ப்பித்தார்.

அதனை தொடர்ந்து 5 லட்சம் ரூபா பிணையில் பாரவூர்தியையும் அதில் இருந்த சுண்ணக்கற்களையும் விடுவித்த மன்று, பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய உடைக்கப்பட்ட சுண்ணக் கற்களை பகுப்பாய்வுக்காக அனுப்பவும் மன்று உத்தரவிட்டது.

முந்தைய செய்தி கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்கப்பட வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை
அடுத்த செய்தி யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு இம்மாதம் 25 ஆம் திகதி ஆரம்பம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹால்பே ரத்தனகொல்ல மலைப் பகுதியில் தீப்பரவல்!

ஆகஸ்ட் 8, 2025
இலங்கை

ஆரையம்பதியில் மினி சூறாவளி – மின்சாரம் தடை!

அக்டோபர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

படையினரை காட்டிக்கொடுத்துவிட்டார் பொன்சேகா -உதய கம்மன்பில தெரிவிப்பு!

அக்டோபர் 16, 2025
இலங்கை

போலி வலைத்தளங்கள் மூலம் பண மோசடி செய்ததாக கூறப்படும் எட்டு சந்தேகநபர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

செப்டம்பர் 25, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?