Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

1 கப் ரவையும், 1/2 கப் தயிரும் இருந்தா… காலையில் பன் தோசை ரெடி….

ஜனவரி 3, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

காலை டிபன் செய்ய இட்லி, தோசை மாவு இல்லையா? அப்போது பூரி, பொங்கல் என்று செய்வதற்கு பதிலாக, ஒருமுறை வீட்டில் ரவையும், தயிரும் இருந்தால், பன் தோசையை ட்ரை செய்யுங்கள். இந்த தோசை செய்வதற்கு மிகவும் சுலபம். இது பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.

இந்த தோசைக்கு தேங்காய் சட்னி ஒன்றே போதும். செம சூப்பராக இருக்கும். முக்கியமாக இப்படி தோசை செய்யும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். வேலைக்கு செல்பவர்கள் காலையில் தாமதமாக எழுந்துவிட்டால், டக்கென்று ஒரு காலை டிபன் செய்ய நினைத்தால், இதை செய்யலாம். உங்களுக்கு பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

* ரவை -1 கப்

* தயிர் – 1/2 கப்

* உப்பு – 1 டீஸ்பூன்

* அரிசி மாவு – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 2

* கறிவேப்பிலை – சிறிது

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை: * முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் ரவை, 1/2 கப் தயிர், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி, ரவையுடன் சேர்த்து அத்துடன் கொத்தமல்லியைத் தூவி நன்கு கலந்து விட வேண்டும்.

* மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், ஒவ்வொரு கரண்டியாக கல்லில் ஊற்றி, மேலே எண்ணெய் சேர்த்து, மூடி வைத்து சிறிது நேரம் வேக வைத்து, பின் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான பஞ்சு போன்ற பன் தோசை தயார்.

 

 

முந்தைய செய்தி காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்.
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம் வாங்க….

பிப்ரவரி 3, 2025
ஆரோக்கியம்

நம் உணவில் வாழைக்காயை சேர்த்து கொள்வதால் இத்தனை நன்மைகளா……

பிப்ரவரி 24, 2025
ஆரோக்கியம்

பேரிக்காய் பழத்தின் நன்மைகள் !

மார்ச் 31, 2025
ஆரோக்கியம்

பருத்திப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்….

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?