நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (ஜனவரி மாதம் 01ஆம் திகதி காலை 06.00 மணி முதல் 02 ஆம் திகதி காலை 06.00 மணி வரை) மது போதையில் வாகனங்களை செலுத்தியதாக கூறப்படும் 509 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 5,415 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது போதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கும், கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய 57 சாரதிகளுக்கும், அதிவேகமாக வாகனம் செலுத்திய 54 சாரதிகளுக்கும், போக்குவரத்து விதிகளை மீறிய 1057 சாரதிகளுக்கும், உரிமத்தை மீறிய 614 சாரதிகளுக்கும் ஏனைய போக்குவரத்து விதிகளை மீறிய 4,953 சாரதிகளுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.