கியூபெக் மாகாணத்தில் புதியதாகக் குடியேறுபவர்கள் அந்த மாகாணத்தின் பொதுவான கலாசாரம் மற்றும் விழுமியங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்
என்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Bill 84 என்று அழைக்கப்படும் இந்த சட்டமூலம் ஆனது, கியூபெக் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளதன் மூலம், குறித்த சட்டமூலம் ஆனது, ஒரு
சட்டமாக உருப்பெற்றுள்ளது. இந்த சட்டம் குறிப்பிடும் விழுமியங்களில் ஜனநாயகம், மதச்சார்பின்மை (secularism), மற்றும் பிரெஞ்சு மொழியை கியூபெக்கின் உத்தியோகபூர்வ மொழியாகப் பாதுகாத்தல் ஆகியவை அடங்கும். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கியூபெக் குடிவரவுத்துறை அமைச்சர் ஜீன்-
பிரான்சுவா ரொபேர்ஜ் (Jean-François Roberge) இந்தச் சட்டம் "ஒருங்கிணைப்பை (integration) நோக்கமாகக் கொண்டது என்றும், புதிய
குடியேற்றவாசிகள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதற்கும், கியூபெக்கின் நிறுவனங்கள் மற்றும் விழுமியங்களைப் புரிந்துகொள்வதற்கும்
உதவுவதன் மூலம் அவர்கள் "கியூபெக்கினை சொந்த மண்ணாக உணர்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தச் சட்டம் Ligue des Droits et Liberates போன்ற சமூக அமைப்புகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மக்களின் குடியேற்றம் ஆனது, தங்கள் விழுமியங்களுக்கும், வீட்டுப் பிரச்சனைகளுக்கும் அச்சுறுத்தல் என்று, கியூபெக் மக்களை நம்பவைப்பதற்காக மாகாணா அரசாங்கம் முயற்சிப்பதாக, குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்தச் சட்டம் ஆனது, குடியேற்றவாசிகள் இந்த விழுமியங்களுக்கு இணங்கவில்லை என்று மறைமுகமாகச் சொல்வதாகவும், சமூகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் குடியேற்ற எதிர்ப்புப் பேச்சுகளை இது தூண்டுவதாகவும் அமைந்துள்ளதென விமர்சனங்கள் எழுந்துள்ளன.
