2025 ஆம் ஆண்டுக்கான 6ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான முதல் சுற்று மேன்முறையீட்டு பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெறுபேறுகளை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சென்று பார்வையிட முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,மேன்முறையீடு மூலம் பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான விடயங்கள், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரால் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
