நீர்கொழும்பு, தலாதுவ பகுதியில் இன்று (28) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
