யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இக்குழந்தைகள் பிறந்ததாகவும், தற்போது விசேட பராமரிப்பு பகுதியில் வைத்துப் பராமரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு 5 குழந்தைகளைப் பிரசவித்ததாகவும், தாயும் , குழந்தைகளும் தற்போது நலமாக இருக்கின்றார்கள் எனவும் அவர் எமது செய்தி சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
