Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

விஜய்யின், பிரசாரத்திற்குத் தடை விதிக்க உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்!

செப்டம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின், பிரசாரத்திற்குத் தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்பவரினால், சென்னை உயர் நீதிமன்றில்  இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தலை இலக்கு வைத்து, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்வதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர் நேற்று கரூரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசியிருந்தார்.

இதன்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்திற்குத் தடை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தல் பிரசாரத்தில் போதுமான காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னதாக, கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை இந்த மக்கள் கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டதுடன், திட்டமிடப்பட்ட சதி நடந்துள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகம் முறையிட்டுள்ளது.

ஆனால், கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், பிரசாரம் செய்த போது கல் வீச்சு எதுவும் நடைபெறவில்லை எனச் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்குச் சென்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானம்!
அடுத்த செய்தி சீனாவின் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

பிரிட்டனின் தடைவிதிப்பு அரசியலுகக்கான ஒரு நாடகம் – கருணா அம்மான் தெரிவிப்பு…

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி பிரதேசத்தில் கடும் மழையால் வெள்ளம்…

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும் – பா.உ ரவிகரன்

பிப்ரவரி 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?