தென்னிந்திய இசையமைப்பாளரும், பாடகருமான சந்தோஷ் நாராயணன் இலங்கைக்கு வந்துள்ளதை அடுத்து இன்றைய தினம் (22) இலங்கைப் நாடாளுமன்றத்தின் தேசிய மக்கள் சக்தியினுன் அமைச்சர்களையும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்த சந்திப்பில் இலங்கையில் உள்ள இளைஞர் – யுவதிகளின் திறமைகளை வெளி கொண்டு வரும் நோக்கோடு கலந்துரையாடல் இடம்பெற்றது.
வடக்கில் சினிமா துறையினை இன்னும் மேம்படுத்தும் வகையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் பேசப்பட்டது.
குறிப்பிட்ட இச் சந்த்திப்பில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா, ஜெகத் மனோகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
