மைக்ரோசொப்ட் நிறுவனம் 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக அளவில்
சுமார் 2,28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
அதே போல் 10,000 ஊழியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது, தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது
6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஊழியர் பணிநீக்கத்தின் பின்னணியில், அந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை அதிகரித்துள்ளமையே காரணமாக இருக்கக்கூடுமென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
