முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரை, இயலுமானால் கைது செய்து காட்டுமாறு, இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இந்த சவாலை விடுத்துள்ளார். திமிங்கிலங்களை விட்டுவிட்டு நெத்தலி மீன்களையே இந்த அரசாங்கம் பிடிக்கிறது என, அவர் விமர்சித்துள்ளார்.
