புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கை ‘பயங்கரவாதி’ என அழைத்த சஸ்காட்சுவான் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், ராகெல் ஹில்பர்ட் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
ஹம்போல்ட்-வாட்ரோஸ் சட்டமன்ற உறுப்பினரான ராகெல் ஹில்பர்ட், கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி, அன்று மாகாண பட்ஜெட் விவாதத்தின் போது சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
புதிய ஜனநாயகக் கட்சியை அவர் தமது உரையின் போது கண்டித்தார்.
அக்கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவு ஒப்பந்தம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
இதன்போதே, ஜக்மீத் சிங்கை ‘பயங்கரவாதி’ என அவர் அழைத்தார்.
இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஹில்பர்ட் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
