Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

கச்சத்தீவை மீட்கும் மு.க ஸ்டாலினின் தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றம்

ஏப்ரல் 2, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்மொழிந்து மு.க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை, முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக அமைந்துள்ளதாகத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இலங்கையில் அரசாங்கங்கள் மாறினாலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.

தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு மறந்துவிடும் காரணத்தால் தமிழக மீனவர்களைத் தாம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என அழுத்தமாகக் கூறுவதாகச் சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல்,மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக இலங்கைக் கடற்படையினரும், இலங்கை அரசும் நடந்து கொள்வது தமக்கு வருத்தமளிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

இதனைப் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்பில் தாம் இதுவரை 74 கடிதங்களை இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் எழுதியுள்ளதாக மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு மீட்பே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்திட விரும்புவதாக மு.க ஸ்டாலின் கூறினார்.

கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது

ஆனால், அரசியல் ஆதாயத்திற்காகக் கட்சிகள் செய்யும் அதே தவறை மத்திய அரசு செய்வது வருந்தத்தக்கது எனவும் ஏற்கமுடியாதது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தில் கச்சத்தீவை மீட்பதற்கான ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும் என மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்தி தனியார் துறை ஊழியர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிய அரசாங்கம் மாற்றீட்டு சட்டத்தைத் தேடுகிறது – எம்.ஏ சுமந்திரன்

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை உற்சவம்!

ஜூலை 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்கா பயணம் செய்யும் இலங்கை பிரதிநிதிகள் குழு !

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் சிறிதரன் தீர்மானங்களை எடுக்கின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஜனவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?