Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பொதுமக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் – சத்தியலிங்கம் எம்பி

மார்ச் 11, 2025
வவுனியா
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
வவுனியாவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் – சத்தியலிங்கம் எம்பி வலியுறுத்தல்
வவுனியா மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இன்று (11/2/2025) நடைபெற்ற ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இந்தக்கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
 வவுனியா மாவட்டத்தில் கடந்தகாலங்களில் விமானப்படைக்கு சொந்தமான விமானநிலைய விஸ்த்தரிப்பிற்காக 3 கட்டங்களாக காணிகள் கையகப்படுத்தப்பட்டன. மூன்றாம் கட்டமாக 1985ம் ஆண்டு பொதுமக்களின் 231.67 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டது. இந்தக்காணிகள் வவுனியா நகரிற்கு அண்மையில் ஏ9 வீதியில் அமைந்துள்ளது. நகர விஸ்த்தரிப்புக்கு தேவையான முக்கியமான இடத்தில் காணப்படும்  இந்த காணியை உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதேபோன்று ஈச்சங்குளம் பிரதேசத்தில் அமைந்திருந்த துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் கனகராயன் குளத்தில் அமைந்துள்ள 561வது டிவிசன் இராணுவ முகாமிற்கு 3 ஏக்கர் அரசகாணி ஒதுக்கப்பட்டபோதிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள தனியாருக்கு சொந்தமான 9 ஏக்கர் காணியும், பொதுமயானத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்தக் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதற்கு பதிலளித்த துறைசார் பிரதி அமைச்சர் ஜலிந்த ருவான் கொடித்துவக்கு மக்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடங்களை அவர்களிடமே மீள ஒப்படைக்கவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு, காரணம் இது மக்களின் மனதோடு தொடர்புபட்டது என்று தெரிவித்தார்.
முந்தைய செய்தி கனடா மீது உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு 50 சதவீத இறக்குமதி வரி – டிரம்ப் அதிரடி..!!
அடுத்த செய்தி மொன்றியலில் தட்டம்மை நோய் தாக்கம் அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். மாவட்ட செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி

டிசம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாதசாரி கடவையில் மின் விளக்குகளை பொருத்தும் திட்டம் முன்னெடுப்பு!

மே 28, 2025
இலங்கை

நல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் தீ

ஆகஸ்ட் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு!

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?