Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடி பொலிசாரின் செயற்பாட்டை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மார்ச் 3, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு ஆரையம்பதியில் தலை தூக்கியுள்ள வாள்வெட்டுக் குழுவை பிரதேசத்தில் இல்லாமல் செய்யுமாறும் காத்தான்குடி பொலிசாரின் பக்கசார்பான செயற்பாடை கண்டித்தும் வாள்வெட்டால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் நீதி கோரி ஆரையம்பதி பிரதேச செயலக்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை (03) பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியலத்திற்கு சென்று மகஜர் ஒன்றை கையளித்தனர்.

கடந்த மாதம் 20 ம் திகதி இரவு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 6 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன் நுழைந்து தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய 4 பேரை கடந்த 24 ம் திகதி கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டதுடன் இதில் தொடர்புடைய இருவரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டுவருதாகவும் இதனால் பிரதேசத்தில் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர் எனவே இந்த வாள்வெட்டுக்குழுவை இல்லாமல் செய்யுமாறு கோரி இன்று காலை 9 மணிக்கு மண்முணை மேற்கு ஆரையம்பதி பிரதேச செயலக்துக்கு முன்னால் பொதுமக்கள் ஒன்று கூடி வாள்வெட்டுக்குழுவை பிரதேசத்தில் இருந்து இல்லாமல் ஒழி, தாக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடு, வன்முறை சூத்திரதாரிகளை சிறையில் அடை, இளைஞர்களை கை கூலியாக்குவபர்களை கண்டுபிடி, போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டகாரர்கள் கையளித்த பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து பேருந்து வண்டியில் மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்குமாகாண பிரதி சிரேஷ்டபொலிஸ் மா அதிபர் காரியலத்துக்கு முன்னால் சென்று அவருக்கான மகஜரை பொலிஸ் அத்தியட்சகரிடம் கைளித்தனர்.

இதன்போது அவர் குறித்த சம்பவத்தில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும், ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாகவும் பக்கசார்பாக செயற்பட்ட பொலிசாருக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறும் அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆர்ப்பாட்டகாரரிடம் அவர் உறுதியளித்ததுடன் அங்கிருந்து ஆர்பாட்டகார்கள் விலகி சென்றனர்.

முந்தைய செய்தி கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா.
அடுத்த செய்தி கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தலவாக்கலையில் நீராடச்சென்ற இளைஞர் சடலமாக மீட்பு !

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நிதி பற்றாக்குறையால் முடங்கியது அமெரிக்க விமான சேவைகள், 1000ற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து !

நவம்பர் 9, 2025
இலங்கை

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

நவம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆசனம் வழங்கப்படாமையினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்

ஜூன் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?