Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

செல்வாக்கு மிக்கவர்கள் மீது வழக்கு தொடர்வது சாத்தியமற்றது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

செப்டம்பர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீது ஊழல் வழக்கு விசாரணை நடத்துவதும், அதற்கு அனுமதி பெறுவதும் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பப்பட்ட அனுமதி மனுக்களில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ‘அறப்போர் இயக்கம்’ என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்தபோது நீதிபதி இந்த வேதனையான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசிடம் இருந்து ஜூலை 28-ஆம் தேதி விளக்கக் கடிதம் வரப்பெற்று அது பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், தமிழக அரசு தரப்பில் இது குறித்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இரு தரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதி, அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்கில் வழக்குத் தொடர அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தால், அதற்குப் பிறகு இந்த வழக்குகள் எவ்வாறு நடக்கும் என்பதை அந்தப் பகவான்தான் தீர்மானிக்க வேண்டும் என ஆதங்கப்பட்டார்.

அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரணைக்குக் கொண்டுவருவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் தாமதங்களையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காணொலி வாயிலாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்
அடுத்த செய்தி அபிஷன் ஜீவிந்த் – சிவராஜ்குமார் இணையும் ‘பிக்காசோ’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

குறுவை நிதி தாமதம்: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

ஆகஸ்ட் 21, 2026
இந்தியா

பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

ஏப்ரல் 19, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

“மன்னிப்பின் மூலம் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

ஆகஸ்ட் 2, 2026
இந்தியா

உசிலம்பட்டி சிறுமி தற்கொலை விவகாரத்தில் தலைமையாசிரியை கைது

ஆகஸ்ட் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?