Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மியாமி விமானநிலையத்தில் சரக்கு விமானம் விபத்து

செப்டம்பர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுவான் நகரத்தில் இருந்து புறப்பட்ட அமேசான் நிறுவனத்தின் ‘பிரைம் ஏர்’ (Prime Air) சரக்கு விமானம், புளோரிடாவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

’21 ஏர்’ நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த போயிங் 767 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், ஓடுபாதையின் எல்லையைத் தாண்டி அதிவேகமாகச் சென்று அருகிலிருந்த சாலையில் பயணித்த பல வாகனங்கள் மீது பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்து அடர்ந்த கரும்புகை சூழத் தொடங்கியது.

இந்த கொடூர சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில், அவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

விபத்தின் போது விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய விமானி மற்றும் துணை விமானி, மற்றும் வாகனங்களுக்குள் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.

மீட்புப் பணியில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு, விமானத்தில் ஏற்பட்ட அபாயகரமான எரிபொருள் கசிவையும் தீயையும் கட்டுப்படுத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மியாமி விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, 320-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமடைந்தன மற்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

32 ஆண்டுகள் பழமையான இந்த போயிங் விமானம் தரையிறங்கியபோது வீசிய பலத்த காற்றும், ஓடுபாதையில் வழக்கமான தூரத்தைத் தாண்டி விமானம் மிதந்து சென்றதுமே விபத்திற்குக் காரணம் எனக் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

முந்தைய செய்தி சீன ராணுவத்தில் மனித உருவ ரோபோக்கள்
அடுத்த செய்தி சீனாவின் காத்மண்டு-திபெத் ரயில் திட்டத்தில் பின்னடைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

பிப்ரவரி 24, 2025
உலகம்முதன்மை செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல் பணயக் கைதிகளின் விடுதலை தாமதமாகிறது..!!

பிப்ரவரி 12, 2025
உலகம்

குரோஷியாவில் துக்க தினம் பிரகடனம்.

டிசம்பர் 21, 2024
அண்மைய செய்திகள்உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரிப்பு

ஜூன் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?