Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

செப்டம்பர் 5, 2026
படிக்க 2 நிமிடங்கள்
module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
SHARE

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், குறித்த மரங்களையும், பலகைகளையும் அரச மரக்கூட்டுத்தாபனத்திடம் கையளிக்குமாறு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மூன்று தேக்கு மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த காணியானது பொதுமக்களின் வழிபாட்டுக்காகவும், சமூக பணிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், குறித்த காணி எல் ஆர் சி காணியாகவே காணப்படுவதாக பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது.

அக்காணியில் அரசின் அனுமதியின்றியும், உரிய அனுமதிகள் பெறப்படாமலும் சட்ட விரோதமாக மூன்று தேக்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்ட அரச செயலகங்கள், கிராம சேவையாளர் ஊடாக அறிக்கையை பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது, அரச காணியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் மற்றும், பலகைகளை அரச மரக்கூட்டுத்தாபனத்திடம் கையளிக்குமாறும், வெட்டப்பட்ட மரங்களிற்கு பதிலாக மரங்களை நாட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

மேற்படி மரங்கள் விற்பனை நோக்கங்களிற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளது. வெட்டப்பட்ட காலப்பகுதியில் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் செயலாளர் சதீஸ் டானியல், சொத்து அலுவலர் உள்ளிட்டோர் வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்ததாகவும் கூறப்படுகின்றது.

குறித்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன நிர்வாகிகள் ஈடுபடவில்லை என கூறப்படுகின்ற போதிலும், மேற்குறித்த இருவரும் 17.07.2026 அன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டமைக்கான ஆதாரங்கள் கெிடைத்துள்ளது.

குறித்த தினத்தன்று மேற்குறித்தவர்கள் அப்பகுதிக்கு சென்று மதிப்பீடு செய்த பின்னர் உணவருந்தியமைக்கான பற்றுச்சீட்டை திருச்சபை நிர்வாகிகளிடம் வழங்கியமை வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் 200 வருடம் பழமைவாய்ந்த வேம்பு இதேபோன்று சட்ட விரோதமாக வெட்டப்பட்டு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், வெட்டப்பட்ட மரங்கள் விற்பனைக்காக தயாராக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் திருச்சபை மக்கள் மத்தியில் அதிர்ப்தி நிலை காணப்படுவதுடன், இயற்கையை நேசிப்பவர்களும் கவலையை வெளியிடுகின்றனர். இயற்கைகள் அழிக்கப்படுவதன் காரணமாக உலகளாவிய ரீதியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அதிக வெப்பமான நிலையும் காணப்படுகின்றது.

இந்த சூழலில், பொறுப்பு மிக்க சமய நிறுவனங்கள் இவ்வாறு இயற்கையை அழிப்பதுடன், சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றமையானது அவர்களின் பொறுப்பற்ற செயலையே காண்பிக்கின்றது.

முந்தைய செய்தி கனடாவில் வேலைவாய்ப்பு சரிவு – ஆகஸ்ட் மாதத்தில் 42,000 வேலைகள் குறைவு
அடுத்த செய்தி நேபாள பேரழிவில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சடுதியாக அதிகரித்த தேங்காய் எண்ணெயின் விலை

ஜனவரி 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அக்டோபர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

ஜூன் 25, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 மே 2025

மே 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?