அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து, கனடியப் பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு பதிலடியாக, அமெரிக்கா விதிக்கும் வரிகளுக்கு “டொலருக்கு டொலர்” என்ற அடிப்படையில் பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
புதிய வர்த்தக மோதலால் பாதிக்கப்படும் கனடிய தொழிலாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் கனடிய அரசு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா–கனடா இடையிலான இந்த புதிய வர்த்தக பதற்றம், இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

