கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்று நிருப முறையை அமல்படுத்தக் கோரியும் சமூக ஊடகங்களில் சீருடை பற்றி இழிவுபடுத்தும் செயற்பாட்டை கண்டித்தும் இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (17) வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சீருடைக்கு மேலதிகமாக ஹிஜாப் அணிவதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை சில அரசியல்வாதிகள் அரசியலாக்கி சுகாதார சுற்று நிருபத்தில் உள்ள சட்டதிட்டங்களை மீறி இடையூறுகள் இடம்பெற்று வருகிறது அதற்கு தீர்வு கோரி அங்கு கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை 8.30 மணிக்கு ஒன்று கூடிய சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவான சீருடை அணிய அனுமதியுங்கள், சீருடை சம்பந்தமான சுற்றுநிருபம் அமுல்படுத்து, சீருடை இன்றி வருபவர்களை கடமைக்கு அனுமதியாதே, சமூக வலைத்தளங்களே எங்களை கொல்லாதே.
வைத்திய சாலைக்கு எதிராக அவதூறுகளை பரப்பாதீர்கள், இதுவரை காலமும் இல்லாத சீருடை புதிதாக சீருடையை அமைக்க வேண்டாம், நிர்வாகமே இதற்கான தீர்வை பெற்றுத் தாருங்கள் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 30 நிமிடம் ஈடுபட்ட பின்னர் கலைந்து சென்றனர்.
அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த சுகாதார சேவை புனிதமானது இன மத பேதம் இன்றி சேவை செய்து வருகிறார் சுகாதார திணைக்களத்தின் சீருடை தொடர்பான சுற்று நிருபத்துக்கு அமைய நாங்கள் சீடையணிந்து சேவை செய்து வருகிறோம். அதேவேளை சீருடை தொடர்பான சுற்று நிருபத்துக்கு அமைய எமது வைத்தியசாலை நிர்வாகம் அதனை கட்டாயமாக்கியுள்ளது.
இந்த நிலையில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண்கள் அந்த சுற்றுநிருபத்தை ஏற்று நியமனத்தை பெற்றுக் கொண்டனர் இருந்தபோதும் சுற்று நிருபத்திலுள்ள ஆடை அணிய முடியாது என தெரிவித்து வருகின்றனர்.
இது இந்த வைத்தியசாலை கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைக்காக இந்த சுகாதார ஊழியர்களின் செயல்பாடு எங்களுக்கு நடந்து கொண்டு இருக்கின்றது எனவே இந்த சீருடை தொடர்பான தீர்வை முழுமையாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

