Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் வில் – எமார்ட் பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

ஜூலை 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் உள்ள வில்-எமார்ட் (Ville-Émard) பகுதியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலில் 42 வயதுடைய நபர் ஒருவர் தீவிர காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவத்தை ஆண்டின் 13ஆவது கொலைச் சம்பவமாகப் பதிவுசெய்துள்ள மொன்றியால் பொலிஸார் (SPVM), தப்பிச் சென்ற சந்தேகநபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சட்-ஓவெஸ்ட் (Sud-Ouest) பெருநகரப் பிரிவுக்குட்பட்ட மங்க் வீதி (Monk Boulevard) மற்றும் பியர்-ஹெரூக்ஸ் வீதி (Pierre-Héroux Street) சந்திப்புக்கு அருகில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் காணப்படுவதாக, மொன்றியல் பொலிஸாருக்குப் அவசர தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 42 வயது நபரை மீட்டனர்.

அவசர மருத்துவப் பிரிவினரால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, தெளிவற்ற காரணங்களுக்காகப் பாதிக்கப்பட்ட நபர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர் என, மொன்றியால் பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஜோஹானி சார்லண்ட் (Johany Charland) தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் இடம்பெற்ற பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பொலிஸார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கொலைக் குற்றப் பிரிவு  அதிகாரிகளின் உதவியுடன் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
அடுத்த செய்தி வெள்ளப் பாதிப்பில் சிக்கிய டொலார்ட் டெஸ் ஓர்மோ நகரப்பகுதி மக்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை !

மார்ச் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாகாண நியமனங்களுக்கான அழைப்பு வெளியாகியுள்ளது

ஜூலை 14, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவில் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றினால் மோதல் ஏற்படும்….

மே 27, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் கார்னி

ஜூலை 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?