பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குள்ளான நபர்களை இலங்கைக்குள்ளே அழைத்து வருவதில், தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு தடையும் இல்லை என்று, அந்த நாட்டின் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பாதாள உலகக் குழுவினரைத் இராஜதந்திர தூதரக உறவுகள் மூலம் இலங்கைக்குக் அழைத்துவர முடியுமென்றால்,
இவர்களைக் கொண்டுவருவதும் சாத்தியமானதே என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத்
தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த நபர்களை நாட்டுக்குக் அழைத்துவரும் விவகாரம் முற்றிலும் நீதித்துறை சார்ந்த ஒரு செயல்முறை
என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும், சுயாதீனத்தையும் தடையின்றிச் செய்துகொடுப்பதே, அரசாங்கம் என்ற ரீதியில் தமது பொறுப்பு, ஆகும் என்று, அவர் தெரிவித்தார். இலங்கை மக்கள் தற்போதைக்கு நினைத்துக் கூடப் பார்க்காத பல முக்கிய குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளமை, சுட்டிக்காட்டத் தக்கது.
