கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இன்றைய கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதால், அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வியாழக்கிழமைபகல் 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் சிவஞானம் ஸ்ரீதரன் அர்ச்சனா இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு திருவையாறு பகுதியில் விவசாய அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ”சிறுதானிய மற்றும் நிலக்கடலை உற்பத்தி அபிவிருத்தி திட்டம்” கைவிடப்பட்டமை தொடர்பில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணியை ஆக்கிரமிப்பு செய்து தனது வீட்டுக்குச் செல்லும் வீதிக்கு 3.5 மில்லியன் அரச நிதியில்
பாலம் அமைத்துள்ளதாகவும் இதற்கு அதிகாரிகள் துணைபோயுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சனா இராமநாதனால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்தக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. பொலிஸ் அதிகாரிகள் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
