Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

ஜூலை 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் இராணுவத் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கியூபெக் (Quebec) மாகாணத்தில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை நிறுவவுள்ளதாக, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, நவீனப் போரியல் உத்திகளில் ட்ரோன்களின் அத்தியாவசியப் பங்கை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

இதை உணர்ந்துள்ள மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty), கியூபெக் மாகாணத்தின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி மையமாகத் திகழும் மிரபெல் (Mirabel) நகருக்கு நேரில் விஜயம் செய்தபோதே, இத்திட்டத்தை முறைப்படி அறிவித்தார். ‘ஏரோ மொன்றியல்’ (Aéro Montréal) அமைப்பின் தலைமையில் ஒன்றிணைந்துள்ள சுமார் 30 அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்த ஆய்வு மையத்தை நிறுவி இயக்கவுள்ளது.

இதற்காக அந்தக் கூட்டமைப்புக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 30 மில்லியன் டொலர் நிதியுதவியை மத்திய அரசு வழங்கவுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் இந்த பாதுகாப்பு கண்டுபிடிப்பு மையம் ஆனது, தானியங்கி மற்றும் ஆளில்லா அமைப்புகளின் மேம்பாட்டிற்காக
அர்ப்பணிக்கப்படவுள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தை கனேடிய கூட்டுப் படைகளின் கட்டளைப்பீடம் vநேரடியாக ஆதரித்து நிதியுதவி வழங்கவுள்ளது.

புதிதாக நிறுவப்படவுள்ள இந்த தேசிய ட்ரோன் தொழில்நுட்ப மையத்தில் (NEXUS) தொழில்துறை வல்லுநர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படவுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு தனது உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கும், வெளிநாட்டுத் தற்காப்பு
இறக்குமதிகளைக் குறைப்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக, வட அமெரிக்க வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் ஆர்க்டிக்
எல்லைக் கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ள இத்தகைய உள்நாட்டு ஆராய்ச்சி மையங்கள் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகின்றன.

முந்தைய செய்தி நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா
அடுத்த செய்தி “குடிநீர் விவகாரத்தில் அரசு அரசியல் விளையாடுகிறது” – ஒட்டாவாவில் பூர்வகுடித் தலைவர்கள் கடும் குற்றச்சாட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மோர்சியர்-ஹோசலகா-மைசோனேவ் (Mercier–Hochelaga-Maisonneuve) பகுதியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு

மே 27, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது குஜராத் டைட்டன்ஸ்

மே 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது

மார்ச் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?