Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் மக்கள் ஆறு கட்சிகள் கூட்டாக இணைவதை நிராகரிக்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

ஜூலை 15, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

ஆறு கட்சிகள் கூட்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கும் எனவே தமிழரசு கட்சியினுடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்திவிட்டு, அரசியல் செய்ய முடியாவிட்டால் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒதுங்கி செல்லவும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் ஒன்றை புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இவர்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிய நிலையில் மீண்டும் இவ்வாறான தமிழ் கட்சிகள் ஒன்றினைவு வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும்

எனவே தமிழ் மக்களிடம் கேட்டுக் கொள்வது காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் இந்த சம்பவம் தமிழரசு கட்சியின் உடைய இந்த திட்டங்களை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாட்டத்தின் போது தமிழரசு கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த மறைந்த சம்பந்தன் இலங்கை தேசிய கொடியை அசைத்து தமிழர்களுக்கும் சுதந்திரம் கிடைத்ததாக சர்வதேசத்துக்கு நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம் என அன்று கொண்டாடினார் அதற்கு அவருக்கு சொகுசு வீடு வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இன்று அந்த கட்சியினர் தமிழருக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என இலங்கை சுதந்திர தினத்தில் இலங்கைக்கு சுதந்திர தினம் தமிழருக்கு கரிநாள் என்று இன்று கூறுகின்றனர். இவ்வாறு இவர்கள் காலத்திற்கு காலம் நேரத்துக்கு நேரம் கொள்கைகளை மாற்றி வருகின்றனர்.

இவர்கள் தமிழ் மக்களுக்கு உண்மையான விடிவை தேடி தர வேண்டும் என்ற நோக்கம் இல்லை தங்களுடைய அரசியல் இருப்புக்காகவும், தேவைகளுக்காகவும் கால காலமாக அரசியல் ஆசன இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அரசியல் செய்ய முடியாத கால கட்டங்களில் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கு தமிழ் மக்களை வேறு திசைக்கு திருப்பி தேர்தல் வரும்போது கூட்டுச் சேருவதும் கூட்டினைவதும் தேர்தல் முடிந்த பின்னர் ஆளுக்கு ஆள் பிரிந்து சென்று விடுவார்கள்.

அதன் பின்னர் தமிழ் மக்களின் இருப்பு தான் கிழக்கு மாகாணத்தில் கேள்விக்கறியாக்கப்படுகின்றது.

எனவே இந்த ஆறு கட்சிகளுடைய கூட்டுச் சேர்வினை தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரைவில் உங்களுக்கான பதிலை தருவார்கள் .

இந்த கூட்டுச் சேர்வு வடக்கு மாகாணத்தை படிக்காவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்களுடைய இருப்பினை நிச்சயமாக இது பாதிக்கும் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

உங்களால் அரசியல் செய்ய முடியாவிட்டால் நீங்கள் தயவு செய்து உங்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நில்லுங்கள்.

நாட்டிலே படித்த வேலையற்ற பட்டதாரிகள் புத்திஜீவிகள் இருக்கின்றனர். அவர்களிடம் தமிழரசு கட்சியை கொடுங்கள் அவர்கள் அதை வழிநடத்திச் செல்வார்கள். காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இந்த பிழைப்பை இத்தோடு நிறுத்தி விடவும் என்றார்.

முந்தைய செய்தி தமிழ் பிரதிநிதிகள் என சொல்பவர்கள் தரகு வேலை பார்க்கின்றார்கள் – க.இளங்குமரன்
அடுத்த செய்தி கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்த கடற்றொழில் அமைச்சர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மோதல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

ஜூலை 20, 2025
இலங்கை

மன்னாரில் நிர்ணய விலையில் விற்பனை செய்யப்படும் மாட்டு இறைச்சி

பிப்ரவரி 9, 2026
இலங்கை

யூசி மாஸ் மன்னார் கிளையின் 20-வது ஆண்டு நிறைவு விழா

ஏப்ரல் 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய தூதுவர்களை நியமித்த ஜனாதிபதி

பிப்ரவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?