Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வலி. வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர்

ஜூலை 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு தேவை எனவும் , அவற்றுக்கான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் , வலி. வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தமது சுய தேவைக்கு எனவும் தெரிவித்திருந்தார்.

பிரதி அமைச்சரின் இக் கூற்றினை முற்றாக நிராகரித்த வலி.வடக்கு மக்கள் , தாம் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டு , 36 வருடங்கள் கடந்த நிலையிலும், எமது காணிகளை பாதுகாப்பு காரணம் என கூறி அடாத்தாக கையகப்படுத்தி, அவற்றில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

நாம் எமது காணிகளை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது, எமது காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவத்தினர் விவசாய உற்பத்தி பொருட்களை பெருமளவில் விற்று இலாபம் ஈட்டுகின்றனர்.

இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடானது, உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்றது.

வலி.வடக்கில் இராணுவத்தினரின் விவசாய பண்ணைகளில் உற்பத்தியாகும் , விவசாய உற்பத்தி பொருட்களை பலாலி வீதியில் உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் மரக்கறி கொள்வனவு நிலையத்தில் இராணுவத்தினர் பெருமளவில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கான ஆதாரமாக தம்மிடம் காணொளி பதிவுகள் உள்ளதாக கூறி அவற்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர்

மக்களின் காணி மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , கடந்த ஆட்சியாளர்கள் போன்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றாது காணிகளை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

முந்தைய செய்தி மாநகர சபை கொட்டும் கழிவுகளால் காக்கைதீவு மக்களுக்கு பெரிதும் பாதிப்பு
அடுத்த செய்தி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37வது நினைவு தின நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாத தடைசட்டம்”

பிப்ரவரி 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

டிசம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புல்மோட்டையில் ஜனாஸா நல்லடக்கத்திற்குத் தடை விதித்ததால் பதற்றம்

ஜூன் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?