Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

21 வயது இளம் தாயை பாலியல் துன்புறுத்தல் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்

ஜூலை 10, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஹோட்டல் ஒன்றில் சுத்திகரிப்பு கடமையில் ஈடுபட்டு வந்த 21 வயது பெண் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 50 வயதுடைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (09) பிற்பகல் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த நகரசபை உறுப்பினரின் ஹோட்டல் ஒன்றின் சுத்திகரிப்பு வேலைக்கு வெற்றிடம் இருந்து வந்துள்ள நிலையில் திருமணம் முடித்து கணவனை பிரிந்து வாழும் ஒரு குழந்தைக்கு தாயான 21 வயது பெண்ணின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு குறித்த வேலையை 40 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு அமர்த்தப்பட்டு அவர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு ஹோட்டல் உரிமையாளரான நகரசபை உறுப்பினர் ஒழுங்காக சம்பளம் வழங்காததையடுத்து குறித்த பெண் பணிக்கு செல்லாது இருந்து வந்துள்ளதாகவும் வழங்கப்படாத சம்பளத்தை தருவதாகவும் வேலைக்கு வருமாறு நகரசபை உறுப்பினர் தொலைபேசி ஊடாக பெண்ணை அழைத்துள்ளார்.

இதன் பிரகாரம் சம்பவ தினமான நேற்று வியாழக்கிழமை காலையில் குறித்த ஹோட்டலுக்கு சென்ற பெண் அங்குள்ள அறைகளை துப்பரவு செய்யும் போது அதன் கதவுகளை பூட்டி விட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நகரசபை உறுப்பினர் குறித்த அறையின் கதவின் வேறு ஒரு திறப்பை பயன்படுத்தி கொண்டு கதவை திறந்து உள்நுழைந்து கொண்டு தனது கையை பிடித்து நெஞ்சு பகுதியை பிடித்ததாகவும் அதனை உதறி தள்ளி கொண்டு அறையில் இருந்து வெளியே வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நகரசபை உறுப்பினரை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்த வரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (10) ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி வருடாந்த நிதிப் பற்றாக்குறையுடன்  நிதியாண்டை நிறைவு செய்த கன்சர்வேடிவ் கட்சி
அடுத்த செய்தி மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சிகு விஜயம் செய்த பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க

ஜூலை 19, 2026
இலங்கை

காணி இல்லையென்றால் மக்கள் தெருவிலா இருப்பது – ரவிகரன் எம்.பி!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

ஆகஸ்ட் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது!

நவம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?