மொன்றியல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், உள்ளூர் மக்களிடையே ஆழமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனநல மருத்துவப் பேராசிரியர்கள், ஒரு கொடூரமான வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு மனித மனம் அதிர்ச்சி (Shock), பயம், கோபம், சோகம் மற்றும் தீவிர மனப்பதற்றத்தை வெளிப்படுத்துவது ஒரு ‘இயல்பான நிலை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய உணர்வுகளை அடக்க முயலாமல், அவற்றை ஏற்றுக்கொண்டு முறையான சுய பாதுகாப்பு உத்திகளைப் பின்பற்றுவதன் மூலமே, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய பயமும் பதற்றமும் சில நாட்கள் அல்லது வாரங்களில் நண்பர்களின் ஆதரவோடு சரியாகிவிடும். எனினும், இந்த மன உளைச்சல் ஒரு வாரத்தைத் தாண்டியும் நீடித்து, தினசரி கடமைகளைச் செய்யவிடாமல் முடக்கினால், அது ‘பிடிஎஸ்டி’ எனப்படும்.
அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறாக மாற வாய்ப்புள்ளது என, மனநல மருத்துவப் பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மொன்றியல் மக்கள் தங்களின் உளவியல் சமநிலையை (Equilibrium) மீட்டெடுப்பதற்கு மனநலத் துறை வல்லுநர்கள் சில முக்கியமான நடைமுறை ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


