வடகிழக்கு பிரான்சின் டாம்ப்லைன் நகரில், ஸ்கைடைவர்ஸ் குழுவினரை ஏற்றிச் சென்ற வானுார்தி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தின் விமானி, ஐந்து பாராசூட் பயிற்றுனர்கள் மற்றும் ஐந்து மாணவர்கள் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று மெர்த்-எட்-மொசெல்லே பிராந்தியத்தின் தலைவர் ஈவ்ஸ் செகுய் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
விமானம் விபத்துக்குள்ளான உடனேயே மீட்புக் குழுக்களும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து,விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய சாட்சியங்களிடம் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


