Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட 58 பேர் கைது – அரசின் அதிரடி நடவடிக்கை!

ஜூன் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 58 பிரதான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சில முக்கிய குற்றவழக்குகளின் சாட்சியாளர்கள் நாட்டில் சாட்சியமளிக்க அச்சப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தூதரகங்கள் மூலம் சாட்சியமளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதன்படி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உத்தியோகபூர்வ விபரங்களை ஜனாதிபதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்

ஹெரோயின்: 3,390 KG , ஐஸ் : 5,543 KG , கொகெய்ன்: 304 KG குஷ் : 1,521 KG , போதை மாத்திரைகள்: 51 இலட்சத்திற்கும் அதிகம்

ஆழ்கடலில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் மற்றும் வானூர்தி நிலையம், துறைமுக சோதனைகள் மூலம் இவை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலில் திட்டமிட்ட குற்றக்குழுக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சமூகத்தில் மிகக் கௌரவமான நிலையில் உள்ள முக்கிய புள்ளிகளும் எவ்வித தராதரமுமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறைச்சாலைகளுக்குள் இருந்துகொண்டு திட்டமிட்ட குற்றக்குழுக்கள் போதைப்பொருள் நெட்வொர்க்கை இயக்குவதை முழுமையாகத் தடுப்பதற்காக, வெலிசறையில் அதிநவீன விசேட சிறைச்சாலை வளாகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

“பிரதான குற்றவாளிகள் அனைவரும் வெலிசறை விசேட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். அங்கு அனைத்துத் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறைக்குள் இருந்துகொண்டு குற்றங்களை இயக்கும் கலாசாரம் கணிசமான அளவு முடக்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை
அடுத்த செய்தி வெனிசுலா நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்சினிமா

‘அமரன்’ படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்….

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள்

ஜூன் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

“தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்பு வேலைத்திட்டம் – மன்னாரில் ஆரம்பம்

ஜூன் 18, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

மே 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?