வவுனியாவில் உணவகங்களை நடாத்தும் உரிமையாளர்கள் மற்றும் அது சார்ந்த பிரதிநிதிகளுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்று வவுனியா வர்த்தகர்சங்க கட்டடத்தில் இன்று இடம்பெற்றது.
வர்த்தகர்சங்கத்தின் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நகரப்பகுதிகளில் உணவகங்களை நடாத்தும் உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் சார்பான பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.
இதன்போது உணவகங்களில் உணவுகளை கையாளும் முறை மற்றும் உணவுப்பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக வவுனியா நகர சுகாதார பரிசோதகரால் அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டிருந்தது.
அத்துடன் உணவகங்கள் தொடர்பாக அதனை நடாத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.


