வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் யாழ் . மாவட்ட அணி சார்பில் பங்கேற்ற வேலணை பிரதேசத்தை சேர்ந்த ஜெ. விதுர்சினி சம்பியனாகியுள்ளார்.
மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற விதர்சினி , யாழ்.இந்துக்கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற மாகாண மட்ட போட்டியில் சாம்பியனாக தெரிவாகியுள்ளார்.
மாகாண மட்ட போட்டியில் சம்பியனாதை தொடர்ந்து வடமாகாணம் சார்பில் தேசிய மட்ட போட்டியிலும் கலந்துகொள்ளவுள்ளார்.


