வளைகுடா போரில் ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனால் ஈரானுக்கு அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அரபு நாடுகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில், வொஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், மசகு எண்ணெய் விலை விரைவில் சரியும் என்றார்.
இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில்,“மேற்கு ஆசியாவில் ஏராளமான எண்ணெய் உள்ளது. அவை கடுமையாக வீழ்ச்சியடையும். எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைவதை நீங்கள் காண்பீர்கள்”என்றார்
