Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

களுவாஞ்சிக்குடியில் 17 இலட்சம் பணத்துடன் முகாமையாளர் மாயம்

ஏப்ரல் 26, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை ஈடுபிடிக்கும் கம்பனி ஒன்றின் முகாமையாளர் ஒரு கோடியே 57 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலட்சம் ரூபா பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை ஈடு பிடிக்கும் நிறுவனம் ஒன்றில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (24) ஆம் திகதி அதன் முகாமையாளர் கணக்காளரை அனுகி இன்று ஈடு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் கணவனுடன் தகராறு எனவே அந்த தங்க ஆபரணங்களை பார்ப்பதற்கு வருவார் என கூறி அதனை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுத்து தனது மேசையில் வைத்து கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து கம்பனியின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் இருந்து வங்கிக்கு பணம் இதுவரை வைப்பில் இடப்படவில்லை அதனை வைப்பில் இடுமாறு கோரியபோது அந்த 17 இலட்சம் ரூபா பணத்தை தான் வைப்பில் இடுவதாக கணக்காளரிடம் இருந்து பணத்தை முகாமையாளர் எடுத்துக் கொண்டார்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் முகாமையாளர் தங்க ஆபரணங்களை வாடிக்கையாளரிடம் காட்டி விட்டு இந்த வாறன் என தங்க ஆபரணங்களையும் பணத்தையும் எடுத்து கொண்டு பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு கம்பனியில் இருந்து வெளியேறி போயுள்ளவர் மாலை ஆகியும் அவர் கம்பனிக்கு திரும்பி வராததையடுத்து அவருடைய கையடக்க தொலைபேசிக்கு தொடர்பு ஏற்படுத்திய போதும் அது நிறுத்தப்பட்டிருந்தது தங்க ஆபரணம் மற்றும் பணத்துடன் போனவர் போனவர் தான் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த திருட்டு தொடர்பாக கம்பனியின் கணக்காளர் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற குறித்த முகாமையாளர் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி அருச்சுனா எம்.பியுடன் தர்க்கப்பட்ட பெண் ஒரு வயது குழந்தையுடன் விளக்கமறியலில்
அடுத்த செய்தி யாழில். தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹோட்டலில் வழங்கிய நூடுல்ஸில் கரப்பான்பூச்சி

ஜனவரி 2, 2026
இலங்கை

மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 22, 2025
இலங்கை

இலங்கை மின்சார சபைக்கு தலைவர் நியமனம்

ஜூன் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கலந்த நீரை பருகிய இரு நாய்கள் உயிரிழப்பு!

அக்டோபர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?